/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் மூலநாதர் கோவிலில் தாராபிஷேகம்
/
பாகூர் மூலநாதர் கோவிலில் தாராபிஷேகம்
ADDED : மே 05, 2024 03:29 AM
பாகூர் : அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமிக்கு, தாராபிஷேகம் நேற்று துவங்கியது.
காலை 9:25 மணிக்கு துவங்கி வரும் 28ம் தேதி மாலை 4:30 மணி வரை நீடிக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு, மூலநாதர் சுவாமிக்கு 108 லிட்டர் பன்னீர், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அக்னி நட்சத்திர நாட்கள் முழுதும் சுவாமியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தில் நிரப்பப்பட்ட பன்னீர், ஏலக்காய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், சிவலிங்கத்தின் மீது இடைவிடாது 24 மணி நேரமும், துளி துளியாக விழும் படியான தாராபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.