ADDED : மே 28, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஏம்பலம் அடுத்த மேல் சாத்தமங்கலம் மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார், 30. இவர் 26ம் தேதி மது குடித்துவிட்டு உறுவையாறு - மங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். தகவலறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, அருண்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.