/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை
/
வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை
ADDED : ஜூலை 29, 2024 06:29 AM
புதுச்சேரி : வயிற்று வலி தாங்க முடியாமல் பெயிண்டர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி பிள்ளைத்தோட்டம், நவீனா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குமாரவடிவேல் மனைவி அமுதா. இவரது மகன் சபரிநாதன், 26; பெயிண்டர். திருமணம் ஆகவில்லை. குடிப்பழக்கம் உடைய சபரிநாதன் அடிக்கடி வயிறு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சபரிநாதனை அவரது தாய் கண்டித்தார்.
வயிற்று வலி அதிகமாக இருப்பதால் சாகப் போகிறேன் எனக் கூறி வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.
அவரது தாய் அமுதா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். உறவினர்களுடன் சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, சபரிநாதன் துாக்கில் தொங்கினார்.
அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.