தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திண்டிவனத்தில் வாலிபர் குத்தி கொலை

திண்டிவனத்தில் வாலிபர் குத்தி கொலை

திண்டிவனத்தில் வாலிபர் குத்தி கொலை


ADDED : மே 19, 2024 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2024 03:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : திண்டிவனம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சேகர் மகன் குமரேசன், 39; கட்டட மேஸ்திரியான இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் பின்புறம் தனது தம்பி மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேருடன் மது அருந்தினார்.

குமரேசன் பாட்டிலால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மணிகண்டன் உள்ளிட்டோர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கிருந்த டாக்டரிடம், தவறி கீழே விழுந்ததில் மது பாட்டில் குத்தி விட்டதாக கூறிவிட்டு, 5 பேரும் ஓடிவிட்டனர். குமரேசனை டாக்டர் பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us