/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் நில மோசடி வழக்கு விவகாரம் கைதானவரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
/
கோவில் நில மோசடி வழக்கு விவகாரம் கைதானவரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
கோவில் நில மோசடி வழக்கு விவகாரம் கைதானவரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
கோவில் நில மோசடி வழக்கு விவகாரம் கைதானவரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
ADDED : ஏப் 06, 2024 05:28 AM
புதுச்சேரி: கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று மோசடி செய்த வழக்கில், ஜாமின் கேட்ட பாலாஜியின் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
வில்லியனுார், கோர்காடு பாலசுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ரூ. 4 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த 2008ல் பட்டா கோரி சிலர் விண்ணப்பித்தனர். அப்போதைய செட்டில்மெண்ட் அதிகாரி தர மறுத்தார். கடந்த 2021ல் செட்டில்மெண்ட் அதிகாரியாக இருந்த பாலாஜி, கோவில் நிலத்திற்கு தனி நபர் பெயரில் பட்டா வழங்க உத்தரவிட்டார். அதன்பின், அவர், பதவி உயர்வு பெற்று மீன்வளத்துறை இயக்குநராக சென்று விட்டார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், விழுப்புரம் நாகப்பட்டினம் சாலை பணிக்காக கோவில் நிலத்தின் ஒரு பகுதியை கையப்படுத்தி, இழப்பீடு தொகை ரூ. 70 லட்சம் நிர்ணயித்தது.
இழப்பீட்டு தொகையை தங்களுக்கு வழங்க கோரி, லாஸ்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அப்போது, கோவில் நிலத்திற்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற முயற்சிப்பதாக நில அளவை துறை இயக்குநர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
பட்டா வழங்க உத்தரவிட்ட செட்டில்மெண்ட் அதிகாரி பாலாஜி, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா, தட்சிணாமூர்த்தி மனைவி ஹேமலதா (எ) நந்தினி, சுந்தராம்பாள், லாஸ்பேட்டையைச் சேர்ந்த மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி அசிஸ்டென்ட் ராமமூர்த்தி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இதில், செட்டில்மென்ட் அதிகாரியாக பணியாற்றிய பாலாஜியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த பிப். 20ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி பாலாஜி கடந்த மார்ச் 13ம் தேதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் பாலாஜி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.
கோவில் நிலத்திற்கு பட்டா மாற்றி மோசடி செய்ததால், ஜாமின் வழங்க கூடாது என இந்து முன்னணி சார்பில் வழக்கறிஞர்கள் கிருஷ்ணராஜ், ஸ்ரீதர் வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாலாஜியின் ஜாமின் மனுவை தலைமை நீதிபதி சந்திரசேகரன் தள்ளுபடி செய்தார்.

