/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல்
/
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல்
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல்
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் இயங்கும் நேரம் மாற்றம் நேற்று முதல் அமல்
ADDED : ஜூலை 16, 2024 05:00 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் தினசரி 8 பாட வேளை, பள்ளிகள் இயங்கும் நேர மாற்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
புதுச்சேரியில் மொத்தம் 416 அரசு பள்ளிகள் உள்ளது. இப்பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாட திட்டங்கள், சி.பி.எஸ்.இ., பாட திட்டமாக மாற்றப்பட்டது. சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி, தினசரி பாட வேளை வகுப்புகள், 7 இல் இருந்து 8 ஆகவும், பள்ளிகள் துவங்கும் நேரமும் மாற்றி கடந்த 9ம் தேதி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
நகர பகுதி அரசு பள்ளிகள் காலை 9:00 மணிக்கு துவங்கி மாலை 3:45 மணிக்கு முடியும். கிராம பகுதி பள்ளிகள் காலை 9:30 மணிக்கு துவங்கி மாலை 4:15 மணிக்கு முடியும்.
இந்த இரு வேறு பள்ளி துவங்கும் நேரத்தையும் மாற்றி, அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9:00 மணிக்கு துவங்கி, மாலை 4:20 மணிக்கு முடிக்க வேண்டும்.
தினசரி 7 ஆக இருந்த பாட வேளை வகுப்புகள் 8 ஆக அதிகரிக்கப்பட்டது. இரு இடைவெளி, மதிய உணவு இடைவெளி என புதிய பாடவேளை அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டது. இந்த புதிய நடைமுறை நேற்று 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு பள்ளிகள் அனைத்தும் நேற்று 9:00 மணிக்கு துவங்கிய மாலை 4:20 மணிக்கு முடிந்தது.