ADDED : மே 10, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டில் இருந்து கோபித்து கொண்டு சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார்.
லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 33; இவர் வீட்டில் தனது மனைவியிடம் கடந்த 6ம் தேதி கோபித்து கொண்டு வெளியில் சென்றார். மாலை வரை விட்டுக்கு வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.