ADDED : மே 26, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நிச்சயம் செய்த பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதன் (எ) செந்தில், 40. இவர், 31 வயது பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்தார்.
அந்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர். அதையறிந்த மதன், நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து, அப்பெண்ணை அவதுாறாக பேசினார்.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, மதனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.