/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : ஜூன் 05, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று 45அடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டினார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், குமரகுருபாளையம் பகுதியை சேர்ந்த சத்யா, 30: என தெரியவந்தது. வாலிபர் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.