ADDED : ஏப் 11, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மாதா கோவில் முன்பு மயங்கி விழுந்து கட்டட தொழிலாளி இறந்தார்.
ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 65; இவர் கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் அரியாங்குப்பம் மாதா கோவில் முன்பு நின்றுகொண்டிருந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை, காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

