ADDED : ஏப் 14, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதாட்டி இறந்தார்.
புதுச்சேரி, மூலக்குளம் சால வீதியைச் சேர்ந்தவர் ஜூலியா, 79. இவர் தங்கை குலோடின் என்பவருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஜூலியா வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

