/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவன் மாயம்; போலீசார் விசாரணை
/
சிறுவன் மாயம்; போலீசார் விசாரணை
ADDED : ஏப் 12, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கடைக்கு சென்ற சிறுவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் சாமியர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காண்டியப்பன் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து இவரது மகன் மைத்ரி 16, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தால், இவர் பெரியதந்தை நவநீதம் வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் மைத்ரி நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
நவநீதம் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

