நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உறுவையாறு புதுநகரைச் சேர்ந்தவர் தனஞ்செயன், 36; இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மது அருந்துவிட்டு, மங்கலம்-உறுவையாறு சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த மங்கலம் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசிக்கொண்டு, பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.