ADDED : ஆக 30, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: மதகடிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் குடிபோதையில் பெண்கள் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவிகள் அச்சப்படும் அளவிற்கு தரக்குறைவாக பேசி, ரகளை செய்தார்.
தகவல் அறிந்த திருபுவனை போலீசார் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம், காமராஜர் நகரை சேர்ந்த ராஜிவ்காந்தி 37; என்பது தெரியவந்தது.