ADDED : ஜூலை 04, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் சிவகுருராஜ் கொலன், 67; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் செயின்ட் தாழ் வீதியில் சைக்கிளில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார். பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.