ADDED : மார் 08, 2025 05:18 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜா மகள் கமலி, 24; தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற இவர், மீண்டும் திரும்பி வரவில்லை.
பெற்றோர்கள், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, கமலி வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறினர். இதனிடையே, கமலி, தனது தந்தை மொபைல் எண்ணிற்கு, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், தேட வேண்டாம் என, குறுஞ்செய்தி அனுப்பினார்.
புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.
