ADDED : ஜூன் 24, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, ஜூன் 25–
இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சந்தைபுதுக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்த பெருமாள் மகள் லில்லிஅருணா 29, பி.எஸ்சி., நர்சிங் பட்டதாரி. பெற்றோருடன் வசித்து வந்த இவர் 22ம் தேதி இரவு வீட்டில் படுத்தவர், மறுநாள் காலையில் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, காணாமல் போன லில்லி அருணாவை தேடிவருகின்றனர்.
