ADDED : ஏப் 25, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது.
தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷகம் ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஏரளமானோர் தரிசனம் செய்தனர். நேற்று சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. நாளை காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கரியமாணிக்கம் கிராம மக்கள் செய்துள்ளனர்.

