/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர், வேறு பணிக்கு சென்றவர்களுக்கு டிரான்ஸ்பர் புதுச்சேரி போலீசில் இந்த 'தமாஷ்'
/
இறந்தவர், வேறு பணிக்கு சென்றவர்களுக்கு டிரான்ஸ்பர் புதுச்சேரி போலீசில் இந்த 'தமாஷ்'
இறந்தவர், வேறு பணிக்கு சென்றவர்களுக்கு டிரான்ஸ்பர் புதுச்சேரி போலீசில் இந்த 'தமாஷ்'
இறந்தவர், வேறு பணிக்கு சென்றவர்களுக்கு டிரான்ஸ்பர் புதுச்சேரி போலீசில் இந்த 'தமாஷ்'
ADDED : ஆக 25, 2024 05:42 AM
புதுச்சேரி போலீசில் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், உதவி சப்இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் என 414 பேருக்கு இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவு வெளியானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, இடமாற்றல் உத்தரவு வெளியிட்ட தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் அறிவித்தார்.
இடமாற்றல் உத்தரவு மற்றும் நிறுத்தி வைப்பு உத்தரவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டி.ஜி.பி.யின் அனுமதி இன்றி இடமாற்றல் உத்தரவு வெளியானது எனவும், உள்துறை அமைச்சர் அனுமதி பெறாமல் வெளியான பட்டியல் என்பதால் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளதாக போலீசில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுமட்டும் இன்றி, மணவெளி தொகுதியைச் சேர்ந்த பெண் எஸ்.ஐ., ஒருவர், குற்றப்பத்திரிக்கையில் ஒருவர் பெயரை நீக்கியதிற்காக எஸ்.பி.,யின் கோபத்திற்கு ஆளாகி கட்டாய விடுப்பில் சென்றார். அவரது பெயரும் இடமாற்றல் உத்தரவில் வெளியானது. பெண் எஸ்.ஐ.,யை மாற்ற கூடாது என கடந்த வாரம் சபாநாயகரிடம் இருந்து உத்தரவு சென்றது. அதை மீறி இடமாற்றம் செய்யப்பட்டதால் இந்த உத்தரவு நிறுத்தப்பட்டதாகவும் போலீசார் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பிற்கு இடையே இறந்து போன காவலர், போலீசில் இருந்து வெளியேறி மாற்று அரசு பணிக்கு சென்றவர்களுக்கும் இடமாற்றல் உத்தரவு வெளியானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் வில்லியனுாரைச் சேர்ந்த பெண் காவலர் சத்யா துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டர். அவரது பெயரும் இடமாற்றல் உத்தரவில் இடம்பெற்று இருந்தது. அதுபோல், 2 காவலர்கள் போலீஸ் பணியில் இருந்து வெளியேறி, யு.டி.சி., தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்து விட்டனர்.
அவர்களது பெயரும் இடமாற்ற உத்தரவில் இருந்தது. கடைசியில் 4 இடமாற்றம் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால் இந்த குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

