ADDED : ஜூலை 06, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காசநோயால் பாதிக்கப்பட்ட டிபன் கடை தொழிலாளி பரிதபமாக இறந்தார்.
புதுச்சேரி சண்முகாபுரம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் குமார், 63; டிபன் கடை நடத்தி வந்தார். காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.