நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏம்பலம் அடுத்த பெருங்களூர் கிராமத்தில் உள்ள பூரணி புஷ்கலா சமேத மஞ்சினி கூத்தைய்யனார் கோவிலில், திருக்கல்யாண வைபவம் வரும் 29 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7.00 மணிக்கு அய்யனாருக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், 9.00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. மதியம் 12.00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டு, மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், சங்கல்பம் நடக்கிறது.
தொடர்ந்து மாலை மாற்றுதல், கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம், லாஜஹோமம், மகாதீபாரதனை தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. பின் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

