sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி கொடியேற்றத்துடன் துவங்கியது

/

திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி கொடியேற்றத்துடன் துவங்கியது

திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி கொடியேற்றத்துடன் துவங்கியது

திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி கொடியேற்றத்துடன் துவங்கியது


ADDED : மார் 04, 2025 04:27 AM

Google News

ADDED : மார் 04, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: திருக்காஞ்சியில், வரும் 12ம் தேதி நடைபெறும் மாசிமக தீர்த்தவாரி திருவிழா, நேற்று கொடியெற்றத்துடன் துவங்கியது.

வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக தீர்த்தவாரி விழா நேற்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில், முக்கிய நிகழ்வாக 6ம் தேதி மாலை பரிவேட்டை, 8ம் தேதி இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 10ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், 11ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.

தேர் திருவிழாவை, அன்று காலை 8:30 மணிக்கு, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை செயலர் நெடுஞ்செழியன், ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

முக்கிய விழாவாக, வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சார்யார், கோவில் நிர்வாக அதிகாரி சரவணன் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us