ADDED : மார் 25, 2024 05:07 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு,ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியும், 2,310 அதிகாரிகளுக்கு 8 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, வானரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட மையங்களை பார்வையிட்டு ஓட்டுப் பதிவை திறம்பட நடத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
