ADDED : ஏப் 09, 2024 11:23 PM
அ நிறம் | அளவு
காரைக்கால், : காரைக்காலில் சாலையில் நின்ற இருவரை விஷ வண்டு கொட்டி அரசு மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோவில் தெரு பகுதியில் பனைமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அதிகம் காணப்பட்டு வருகிறது.இதில் கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் அதிகம் உள்ள நிலையில் நேற்று சாலையில் நிண்டிருந்த அதைப்பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் இருதயராஜ் ஆகிய இருவரையும் வண்டு கொட்டியது. இதில் பாதிக்கப்பட்ட இருவரையும் அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.
