/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடையாளம் தெரியாத முதியவருக்கு சிகிச்சை
/
அடையாளம் தெரியாத முதியவருக்கு சிகிச்சை
ADDED : செப் 09, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத முதியவர் பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அருகே கடந்த 6ம் தேதி 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
அரசு மருத்துவமனை ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடைய பெயர் சுப்ரமணி, தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி, விலாசம் மன்னார்குடி, தஞ்சாவூர் மாவட்டம் என கூறியுள்ளார்.
இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை மக்கள் குறைதீர் அதிகாரி ரவி (93634-5115) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.