/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடையாளம் தெரியாத நபர்களுக்கு சிகிச்சை
/
அடையாளம் தெரியாத நபர்களுக்கு சிகிச்சை
ADDED : மார் 26, 2024 05:01 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அடையாளம் தெரியாத நபர்கள் பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.
படத்தில் காணப்படும் நபர் கடந்த 16ஆம் தேதி மயங்கிய நிலையில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை ஆண்கள் மருத்துவ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெயர் முருகன் தந்தை பெயர் பாவாடை வழுதாவூர் ரோடு ராணி ஹாஸ்பிடல் பின்புறம் என கூறியுள்ளார்.
இதேபோன்று கடந்த 23ஆம் தேதி 60 வயது முதியவர் ஒருவர் ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடைய பெயர் விலாசம் எதுவும் தெரியவில்லை.மேற்கண்ட நபர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை மக்கள் குறைதீர் அதிகாரி ரவி (93634-5115) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

