/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை செய்த இருவர் கைது
/
பொது இடத்தில் ரகளை செய்த இருவர் கைது
ADDED : பிப் 22, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சோரியாங்குப்பம் மகரிஷி நகர் சந்திப்பில், இருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்தபோது, கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன், 35; வரக்கால்பட்டை சேர்ந்த வெங்கடேஷ், 46; என்பதும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.