ADDED : செப் 07, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெட்டிக்கடையில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
உருளையான்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். கடலுார் சாலை அந்தோணியர் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அங்கு புதுச்சேரி தவீடுப்பேட் முன்சிபல் குடியிருப்பை சேர்ந்த ராஜீ, 39, லாஸ்பேட்டை பாரி நகர் பொன்னியம்மன் கோவில் தெரு ஜெயக்குமார், 45, ஆகியோரது பெட்டிக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.