ADDED : செப் 09, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை நைனார் மண்டபம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 57; முத்தியால்பேட் வி.ஒ.சி., நகரைச் சேர்ந்தவர் ஜெயபால், 57.
இருவரும், நேற்று இரவு 7:00 மணியளவில், மது குடித்துவிட்டு ஆம்பூர் சாலையில், நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்தனர்.