ADDED : ஆக 08, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு, சீருடைகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், 40க்கும் மேற்பட்ட வீரர்கள், கால்பந்து விளையாட்டுப் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில், அனைவருக்கும் சீருடைகள் வழங்கப்பட்டன.
சீருடைகளை ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி., கந்தநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணராஜ், முன்னாள் கால்பந்து வீரர் விஸ்நாதன், ஒருங்கிணைப்பு செயலர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.