ADDED : ஏப் 30, 2024 05:07 AM
திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் வீரையன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம், தலைவர் லட்சுமணன், செயலாளர் பச்சமுத்து முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் தனசெல்வன் நேரு, பள்ளியின் லோகோவை அறிமுகம் செய்து, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பார்வதி, குமுதா, வேலவன், அன்புக்கரசி, செந்தமிழ் செல்வி, ஓம் சாந்தி, கார்த்தி, சுஜாதா, மலர்கொடி, குப்புசாமி, மகேஸ்வரி, தையல் நாயகி செய்திருந்தனர்.

