sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோருக்கு வெளியில் மருந்து வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரை பணம் இல்லை என பெண்கள் கண்ணீர் மல்க 'வீடியோ'

/

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோருக்கு வெளியில் மருந்து வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரை பணம் இல்லை என பெண்கள் கண்ணீர் மல்க 'வீடியோ'

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோருக்கு வெளியில் மருந்து வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரை பணம் இல்லை என பெண்கள் கண்ணீர் மல்க 'வீடியோ'

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோருக்கு வெளியில் மருந்து வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரை பணம் இல்லை என பெண்கள் கண்ணீர் மல்க 'வீடியோ'


ADDED : ஜூன் 23, 2024 05:04 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சை பெறுவோருக்கு, தனியார் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகள் வாங்கித் தர பணம் இல்லை என, பெண்கள் கண்ணீர் மல்க கூறும் வீடியோ வைரலாகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட பெரியசாமி, மகேஷ், கண்ணன், சிவராமன், ராமநாதன், பாலு, திருமாவளவன், மோகன், மாயக்கண்ணன், ஏசுதாஸ் உள்ளிட்ட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், 10 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். 7 பேர் சாதாரண வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து பாதித்தவர்களுக்கு ஜிப்மரில் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஆனால் சிகிச்சைக்கு தேவையான அத்தனை மருந்துகளும் ஜிப்மரில் இல்லை. அதனால் கள்ளச்சாராய சிகிச்சைக்கு அவசியமான சில மருந்துகளை வெளி மருந்தகங்களில் வாங்கி வர பரிந்துரை செய்கின்றனர். இந்த மருந்துகள் வாங்கித் தர தங்களிடம் போதிய பணம் இல்லை என அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், சிகிச்சைக்கு ஒவ்வொரு வேளைக்கும் 600 முதல் 1,200 ரூபாய்க்கு மருந்து மாத்திரைகள் வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். தினசரி பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அந்த அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை என, மருந்து சீட்டுகளை காண்பித்து அழுகின்றனர்.

தினமும் கட்டட வேலைக்கு சென்று, சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் எங்களிடம் வெளியில் மருந்து வாங்கி வர கூறுவது சிரமமாக உள்ளது. காப்பீடு அட்டை இல்லாததால் வெளியில் இருந்து மருந்து மாத்திரைகள் வாங்கி வருமாறு கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

இறந்த பின்பு நிவாரணமாக ரூ. 10 லட்சம் அளிக்கும் தமிழக அரசு, சிகிச்சையில் உள்ளோருக்கு தேவையான மருந்து மாத்திரைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us