ADDED : பிப் 22, 2025 10:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : முதலியார்பேட்டை உழந்தை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணியால், வரும் 26ம் தேதி, குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
முதலியார்பேட்டை உழந்தை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால், வரும் 26ம் தேதி, விடுதலை நகர், பாரதி மில் நகர், ஐயப்ப சாமி நகர், திரு.வி.க., நகர், பாரதிதாசன் நகர், கடலுார் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திரா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி, அப்துல்கலாம் நகர் மேற்கு ஆகிய பகுதிகளில், மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் இருக்காது.
