ADDED : ஜூலை 29, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: எம்.ஜி.ஆர்., நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், நாளை மறுநாள் (1ம் தேதி) அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மூலகுளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தட்ணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணா வீதி, ஜெயா நகர், ரெட்டியார்பாளையம், புதுநகர், வழுதாவூர் ரோடு தெற்கு, சண்முகாபுரம், சீனுவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (1ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
