/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
/
மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
ADDED : செப் 03, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரியில் உள்ள பல்நோக்கு கருத்தரங்கு கூடத்தில், 2024-25ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று, துவக்க நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கல்லுாரி பொறுப்பு முதல்வர் ெஹன்னா மோனிஷா கல்லுாரிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்றார்.
அதனை தொடர்ந்து, துறை தலைவர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.