ADDED : மார் 07, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புஸ்சி வீதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி புஸ்சி வீதி சாலையோரம் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடந்தார். ஒதியஞ்சாலை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரித்து வருகின்றனர்.