/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவர் குடிப்பதால் மனைவி தற்கொலை
/
கணவர் குடிப்பதால் மனைவி தற்கொலை
ADDED : மார் 01, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கணவர் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
கரிக்கலாம்பாக்கம், புது நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி செல்வி, 38. பாஸ்கரனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவரை செல்வி அவ்வப்போது கண்டித்து வந்தார்.
ஆனால் பாஸ்கரன் தொடர்ந்து குடித்து வந்ததால், தம்பதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் விரக்தியடைந்த செல்வி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.