ADDED : செப் 15, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட் கிருஷ்ணா நகர், மடுவுப்பேட் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பாலா,59; பெயிண்டர்.
குடிப்பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை மனைவி ஞானம் கண்டித்தார். இதனால் மனமுடைந்த பாலா வீட்டில் உள்ள குளியலறை ஜன்னலில் நைலான் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் மணிபாரதி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.