/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுப்பு: கணவர் தற்கொலை
/
குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுப்பு: கணவர் தற்கொலை
ADDED : மே 28, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார், : வில்லியனுார் குடிப்பதற்கு மனைவி பணம் தரமறுத்ததால் மனமுடைந்த கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம், புளியஞ்சாலை தெருவை சேர்ந்தவர் ராஜா,55; டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை ராஜா, குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டார். மனைவி பணம் தர மறுத்துவிட்டார். இதனால் மனைமுடைந்த ராஜா வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.