நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால், : காரைக்காலில் புறவழிச்சாலையை கடந்த சென்ற போது கார் மோதி பெண் உயிழந்தார்.
காரைக்கால் போலகம் முதல் தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மனைவி சந்தோசம், 57;இவர் வீட்டு வேலை செய்துவருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது திருப்பட்டினம் பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தவர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து சென்னை பெருங்களத்துார் பாண்டுரங்கராஜ், 36; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.