/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு
/
காப்பகத்தில் தங்கியிருந்த பெண் சாவு
ADDED : மார் 08, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: காப்பகத்தில் தங்கியிருந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
சிதம்பரம் கஞ்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரி, 46; மனநிலை சரியில்லாத இவர், அரியாங்குப்பம் தனியார் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தங்கியிருந்தார்.
கடந்த 5ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.