/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் மகளிர் தின விழா..
/
அரசு பள்ளியில் மகளிர் தின விழா..
ADDED : மார் 10, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கடுவனுார் அரசு துவக்கப் பள்ளியில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியை கலையரசி வரவேற்றார். பொறுப்பாசிரியர் செந்தமிழ் செல்வன், ஆசிரியைகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆசிரியை ரஞ்சனி மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை தொகுத்து வழங்கினார்.
பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டன.
ஆசிரியை இருசம்மாள் நன்றி கூறினார்.