ADDED : ஆக 10, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, மேலகாசாக்குடி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து மகன் கலைச்செல்வம், 24; கூலி தொழிலாளி. இவர், ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, கலைச்செல்வத்தை நேற்று கைது செய்தனர்.
