ADDED : செப் 06, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அதிகமாக குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார் அடுத்த மங்கலம், திருமலை நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ், 48; கூலித்தொழிலாளி. திருமணமாகாத ஏக்கத்தில் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.
நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.