ADDED : ஜூலை 16, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்டேரிக்குப்பம், மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் கலியபெருமாள், 57; கூலி தொழிலாளி. இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய கலியபெருமாள், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை பிரிந்து, தனது அக்காவுடன் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்த கலியபெருமாள் நேற்று முன்தினம், அப்பகுதி எல்லையம்மன் கோவில் அருகேயுள்ள புளியமரத்தில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
