/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளி மகள் மாயம்; போலீசார் விசாரணை
/
தொழிலாளி மகள் மாயம்; போலீசார் விசாரணை
ADDED : மே 08, 2024 12:06 AM
காரைக்கால் : காரைக்காலில் மீன் பிடித்தொழிலாளி மகள் மாயமானது குறித்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசாகுடி மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜி இவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 17 வயதுடைய இவரது மூத்த மகள் வீட்டிலிருந்தவர். திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து அக்கம் பகத்தில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் சந்தேகத்தின் பேரில் காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் மகன் மாதேஷ்,18; கடத்தி சென்றிருக்கலாம் என போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

