sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

/

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


ADDED : ஆக 16, 2024 05:21 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ''புதுச்சேரியில் பிரமாண்டமாக உலக தமிழ் மாநாடு நடத்தப்படும்'' என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த 78வது சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி, உரையாற்றியதாவது:

ஆன்மிகமும், அழகும் கொண்ட புதுச்சேரி மாநிலம், பெயருக்கு ஏற்ப பல புதுமைகள் கொண்ட மாநிலமாக உள்ளது. கல்வி, சுகாதாரம், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றில் புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஆசியோடு எனது அரசு எடுத்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் விளைவாக புதுச்சேரியில் தனிநபர் வருமானம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 68 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது வழங்கப்பட்டு வரும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 6,500ல் இருந்து ரூ. 8,000 ஆகவும், மழைக்கால நிவாரணம் ரூ. 3,000ல் இருந்து ரூ, 6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ. 1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 36,000 குடும்பத் தலைவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பிரமாண்டமாக உலக தமிழ் மாநாடு நடத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகி்றது.

இந்திய தொல்லியல் துறை உதவியுடன், புதுச்சேரி அரிக்கமேட்டில் ரோமன் சரக்கு கப்பல் மாதிரி வடிவில் விளக்க வழிகாட்டி மையம் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் மத்திய அரசின் டிஜிட்டல் ட்ரோன் சர்வே நடத்தப்பட்டு அனைத்து நில பகுதிகளுக்கும் தனித்துவமான நிலப்பகுதி அடையாள எண் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.






      Dinamalar
      Follow us