ADDED : மே 12, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே துாக்குப்போட்டு தொழிலாளி இறந்தார்.
செஞ்சியை அடுத்த கப்ப சொரத்துாரை சேர்ந்தவர் உசேன்,22; தொழிலாளி. இவர் நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட் பகுதியில் ரியல் எஸ்டேட் மூலம் பிளாட் போடும் இடத்தில் கடந்த, 4 தினங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் வாடகைக்கு இருந்த வீட்டில் உசேன் துாக்குப்போட்டு இறந்தார். இதை பார்த்த அவருடன் வேலை செய்த அவரது உறவினர் பஷீர்,24; பயத்தில் கத்தியால் கையில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.
அங்கிருந்தவர்கள் பஷீரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து உசேன் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
