நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வரம், நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வர கோவிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நித்திஸ்வரருக்கு 1008 சங்கு அபிஷேகம் நடந்தது.
முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து பால்,தயிர்,மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த புனித நீரினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது, பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து ,தீபாராதனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.