/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிேஷகம்
/
சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிேஷகம்
ADDED : டிச 10, 2024 06:49 AM

புதுச்சேரி: கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிேஷகம் நடந்தது.
கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், கார்த்திகை மாத 4ம் திங்கள் கிழமையையொட்டி, நேற்று காலை ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிேஷகம் நடந்தது. அதனையொட்டி காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தொடர்ந்து கணபதி ேஹாமம், ருத்ர ேஹாமம் நடந்தது. பின்னர், மகா அபிேஷகம், சங்காபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை, அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை தேவசேனாதிபதி குருக்கள் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

